;
Athirady Tamil News

சிவராத்திரியை முன்னிட்டு விசேட கலை நிகழ்வு

0
சிவராத்திரியை முன்னிட்டு, திருநெல்வேலி கலாசாலை வீதியில் அமைத்துள்ள, முத்துமாரி அம்மன் ஆலயத்தில் சிவராத்திரி விழா முன்னெடுக்கப்படவுள்ளது.
சிவராத்திரி தினமான நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஆலய முன்றலில் ஆலய தலைவர் கோகுலராஜ் தலைமையில் நடைபெறவுள்ள நிகழ்வில், யாழ்.பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் கலந்து கொள்ளவுள்ளார்.
சிவராத்திரி விழாவில் விசேட கலை நிகழ்வாக வள்ளி திருமண சிந்து நடை கூத்தும், கோவலன் கண்ணகி சிந்து நடை கூத்தும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You might also like

Leave A Reply

Your email address will not be published.