;
Athirady Tamil News

படைகளை களமிறக்கும் பிரித்தானியா! சைப்ரஸுக்கு நகரும் HMS Dragon போர் கப்பல்

0

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலையையடுத்து, பிரித்தானியா தனது இராணுவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது.

சைப்ரஸ் தீவில் உள்ள இராணுவத்திளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட யுத்த உலுங்குவானூர்திகளை அங்கு அனுப்பியுள்ளதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Wildcat உலுங்குவானூர்தி
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக HMS Dragon போர் கப்பலும் Wildcat உலுங்குவானூர்திகளும் அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், கூடுதலாக நான்கு Eurofighter Typhoon போர் விமானங்களை கத்தாருக்கு அனுப்பப்பட உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் விமானங்கள்
அதே நேரத்தில், பிரிட்டன் விமானங்கள் ஜோர்தான், கத்தார் மற்றும் கிழக்கு மெடிடரேனியன் கடல் பகுதிகளின் மீது பாதுகாப்பு கண்காணிப்பு விமானப் பறப்புகளை மேற்கொண்டதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொள்ளும் தாக்குதல்களில் பிரிட்டன் நேரடியாக கலந்து கொள்ளாது என பிரதமர் ஸ்டார்மர் பலமுறை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.