;
Athirady Tamil News

ஈரானிய கடற்படையினரில் சிலர் இலங்கை விமானப்படை தளத்துக்கு மாற்றம்

0

காப்பாற்றப்பட்ட ஈரானிய கடற்படையினரில் சிலர் இலங்கை விமானப்படை தளத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஐஆர்ஐஎஸ் தேனா கப்பல், மூழ்கியதைத் தொடர்ந்து, அதிலிருந்து காப்பாற்றப்பட்ட 32 ஈரானிய கடற்படையினரில் 22 பேர் நேற்று (07) இலங்கை விமானத் தளமான கொக்கலவுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் கராபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்து குணமடைந்த பின்னர் மேற்படி, இலங்கை விமானப்படை தளத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.