;
Athirady Tamil News

யாழில் சைவ ஆலயத்தின் சிலை உடைப்பு – சந்தேகநபரை கைது செய்த பொலிஸார்

0
யாழ்ப்பாணத்தில் உள்ள இந்து ஆலயம் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து விக்கிரகத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்
சரவணை, செல்லக்கதிர்காமம் ஆலயத்தினுள் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த இளைஞன் ஒருவர் ஆலய விக்கிரகத்தை சேதப்படுத்தியுள்ளார்

குறித்த சம்பவம் ஆலயத்தினுள் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களில் பதிவாகியிருந்த நிலையில் அதன் காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்துறை பொலிஸார் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞனை கைது செய்தனர்.

மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சந்தேக நபரை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.