;
Athirady Tamil News

பொதுவெளியில் வராத இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு ; உயிருடன் இல்லையா…ஈரான் பரபரப்பு தகவல்!

0

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தாக்குதல்களில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது பலத்த காயமடைந்திருக்கலாம் என ஈரானின் ஊடகங்களை மேற்கோள்காட்டி பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட நான்கு நாட்களாக பொதுமக்கள் பார்வையில் இருந்து நெதன்யாகு முழுமையாக காணாமல் போனதாக குறிப்பிட்டு ஈரானிய ஊடகங்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

கொல்லப்பட்டிருக்கலாம் …பலத்த காயமடைந்திருக்கலாம்
இஸ்ரேலிய பிரதமர் தொடர்பில் கூறப்படும் அனைத்து அறிக்கைகளும் எழுத்துப்பூர்வமாக மட்டுமே வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதனுடன் தொடர்புடைய வீடியோ அல்லது புகைப்பட உறுதிப்படுத்தல் எதுவும் இல்லை என்றும் ஈரானிய ஊடகங்கள் மேற்கோள் காட்டிய ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.

பிரதமரின் இல்லத்தைச் சுற்றியுள்ள பகுதி அசாதாரண பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது, இருப்பினும் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கப்படவில்லை.

தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் மற்றும் நெதன்யாகுவின் சகோதரர் இட்டோவும் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேக வெளியிட்டுள்ளது.

அதேசமயம் செவ்வாய்க்கிழமை திட்டமிடப்பட்டிருந்த இஸ்ரேலுக்கான பயணத்தை அமெரிக்க தூதர்கள் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் திடீரென ரத்து செய்தது:ள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இஸ்ரேலிய ஊடகங்கள் இந்த ரத்துசெய்தலை விளக்கம் இல்லாமல் செய்தி வெளியிட்டன, மேலும் அமெரிக்கா அல்லது இஸ்ரேலிய அதிகாரிகள் அதற்கான காரணம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

அதேசமயம் ஈரானிய கூற்றுக்கள் தொடர்பாக இஸ்ரேலிய அதிகாரிகள் அல்லது நெதன்யாகுவின் அலுவலகத்திடமிருந்து எந்த மறுப்பு எதையும் தெரிவிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல்களுடன் தொடங்கிய மோதலில் இஸ்ரேலில் உச்ச தலைவர் காமேனி உட்பட உயிரிழப்புகள் 2,000 ஐத் தாண்டியுள்ளன. அதுமட்டுமல்லாது இந்த போரினால் லட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் தொடர்பில் ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.