;
Athirady Tamil News

பாக். கடற்படையின் பாதுகாப்பில் கராச்சி வந்த எண்ணெய்க் கப்பல்கள்!

0

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு துறைமுகம் வந்த 2 எண்ணெய்க் கப்பல்களுக்கு, பாகிஸ்தான் கடற்படை பாதுகாப்பு அளித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் படைகளுக்கும், ஈரானின் படைகளுக்கும் இடையிலான போரால், எரிபொருளுக்காக வளைகுடா நாடுகளைச் சார்ந்துள்ள பாகிஸ்தான் உள்பட பல்வேறு நாடுகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா நகரத்தில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் வந்த 2 எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள் பாதுகாப்பு அளித்துள்ளன.

ஆபரேஷன் முஹாஃபிஸ்-உல்-பஹ்ர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ராணுவ நடவடிக்கை மூலம் 100 மில்லியன் மற்றும் 120 மில்லியன் லிட்டர்கள் அளவுகளிலான எண்ணெய்யைக் கொண்டு வந்த கப்பல்கள் பத்திரமாக பாகிஸ்தான் வந்து சேர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த நடவடிக்கையானது ஹோர்மூஸ் நிரிணையைக் கடக்கும் கப்பல்களுக்கு பாகிஸ்தான் கடற்படை பாதுகாப்பு அளிப்பதாகக் கருதப்படக் கூடாது என அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளது.

முன்னதாக, பிப். 28 முதல் நடைபெற்று வரும் இந்தப் போரால், பாகிஸ்தானில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை வரலாறு காணாத உச்சத்தை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.