;
Athirady Tamil News

யாழில் அதிர்ச்சி சம்பவம் ; ஆசிரியைகளின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்கள்

0

யாழ்ப்பாணம், மருதங்கேணி காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடுத்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 16 பெண் ஆசிரியைகளின் குழுப் புகைப்படத்தைச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்து, சமூக வலைதளங்களில் பரப்பிய ஐந்து மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் தீவிர விசாரணை
பாடசாலையில் எடுக்கப்பட்ட ஆசிரியைகளின் குழுப் புகைப்படத்தை எடுத்த மாணவர்கள், அதனை AI தொழில்நுட்பம் மூலம் ஆபாசமான முறையில் மாற்றியுள்ளனர்.

பின்னர் அந்தப் புகைப்படங்களை வாட்ஸ்அப் (WhatsApp) குழுக்கள் மூலம் பகிர்ந்துள்ளனர்.

இது குறித்துப் பாடசாலை நிர்வாகம் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மருதங்கேணி பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அதற்கமைய பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளுக்கு அமைய ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் இந்த ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (O/L) பரீட்சை எழுதிவிட்டு, முடிவுகளுக்காகக் காத்திருப்பவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

பொலிஸார் மாணவர்களின் கைபேசிகளை ஆய்வு செய்தபோது, நான்கு மாணவர்களின் கைபேசிகளில் அவ்வாறு மாற்றப்பட்ட ஆபாசப் புகைப்படங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் மாணவர்கள் நீதிமன்ற விளக்கமறியல் உத்தரவிற்கு அமைய சிறுவர் நன்னடத்தை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் கல்விச் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.