;
Athirady Tamil News

யாழ் சென்ற வவுனியா இளம் குடும்பஸ்தர் கடத்தப்பட்டு தாக்குதல்

0

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடத்தப்பட்டு மூன்று மணி நேரத்தின் பின் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்காக நேற்றுமுன்தினம் (07) பிற்பகல் 3 மணியளவில் பேரூந்து ஒன்றில் ஏறி தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தார் இளம் குடும்பஸ்தர்.

மூன்று மணி நேரத்தின் பின் விடுதலை
இதன்போது அவரிடம் இருந்து கைத் தொலைபேசியை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் பறித்துக் கொண்டு பேரூந்தில் இருந்து கீழே இறங்கியுள்ளார்.

இதன்போது அங்கு நின்ற முச்சக்கர வண்டி ஓட்டுனர்கள் சிலர் குறித்த இளம் குடும்பஸ்தரை முச்சக்கர வண்டியில் ஏறுமாறு கூறி ஏற்றிக் கொண்டு வவுனியா, புதிய பேரூந்து நிலையத்திற்கும், சோயா வீதிக்கும் இடையிலுள்ள வயல் வெளி பகுதிக்கு அழைத்து சென்று தாக்கியதாக கூறப்படுகின்றது.

அத்துடன், அவர்களால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றில் கையொப்பமும் பெற்றதாகவும், தொலைபேசியில் இருந்த சில ஆவணங்களும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பின் மாலை 6.30 இற்கு பின்னர் அவரை விடுவித்ததாகவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பில வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.