நிலவும் மழையுடனான வானிலை ..! சில பகுதிகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை அறிவிப்பானது இன்று (18.05.2026) பிற்பகல் 4:00 மணி முதல் நாளை (19.05.2026) பிற்பகல் 4:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள்
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு ஆரம்ப எச்சரிக்கை மையத்தினால் பல மாவட்டங்களுக்கு உட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு விழிப்புணர்வு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டம்: சீதாவக்க பிரதேச செயலாளர் பிரிவு.
களுத்துறை மாவட்டம்: பாலிந்தநுவர, அகலவத்தை, மத்துகம மற்றும் புலத்சிங்கள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள்
இரத்தினபுரி மாவட்டம்: எஹெலியகொட, அயகம, கலவானை, இரத்தினபுரி, பெல்மதுளை, கிரியெல்ல மற்றும் குருவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.