;
Athirady Tamil News

ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ள முக்கிய சலுகை

0

இலங்கை ஆசிரியர் சேவையின் வினைத்திறன் தடைகளை நிறைவு செய்வது தொடர்பில் ஆசிரியர்களுக்கு சலுகை வழங்குவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.

கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அரச சேவை ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி முதல் 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் ஆசிரியர் சேவையின் முதலாம் தரத்திற்கு பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள், வினைத்திறன் தடைகளை நிறைவு செய்ய வேண்டிய தேவையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

கல்வி அமைச்சின் சுற்றறிக்கை

எனினும், அடுத்த பதவி உயர்வைப் பெறுவதற்கு முன்னர் குறித்த வினைத்திறன் தடையை நிறைவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஒருவர் பதவி உயர்வு பெற்ற தரத்திற்கு முன்னதாக நிறைவு செய்ய வேண்டிய வினைத்திறன் தடையை, அடுத்த பதவி உயர்வு பெறும் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டும்.

எனினும் தற்போது அந்த நிபந்தனையின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற அதிகாரிகளும், அந்த முந்திய தரத்திற்கான வினைத்திறன் தடையை நிறைவு செய்ய வேண்டிய தேவையிலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.

2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல், தங்களுக்கு உரிய தரத்திற்கான வினைத்திறன் தடையகப் பரீட்சைகள் நடத்தப்படும் திகதி வரையான காலப்பகுதியில் தரப் பதவி உயர்வுக்கு தகுதி பெறும் ஆசிரியர்களுக்கும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

வினைத்திறன் தடையகப் பரீட்சைகளை நிறைவு செய்துள்ளார்களா என்பதை கருத்தில் கொள்ளாமல், அவர்களுக்கு தரப் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் அறிவிக்கும் வகையில் கல்வி அமைச்சின் சுற்றறிக்கை ஒன்று எதிர்வரும் காலத்தில் வெளியிடப்படவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.