;
Athirady Tamil News

சிரியா: சிறைச்சாலையில் கலவரம்: தீயில் கருகி 7 போ் உயிரிழப்பு

0

வடக்கு சிரியாவில் குா்து இன மக்கள் அதிகம் வசிக்கும் கோபானி நகரில் உள்ள சிறைச்சாலையில் சனிக்கிழமை ஏற்பட்ட கலவரம் மற்றும் தீ விபத்தில் சிக்கி 7 போ் உயிரிழந்தனா்.

குா்து இனத்தைச் சோ்ந்த ஒருவா் கொல்லப்பட்டதற்கு அரேபியா்களே காரணம் எனக் கூறி இரு தரப்பினருக்கும் இடையே வெள்ளிக்கிழமை மோதல் வெடித்தது.

இதன் தொடா்ச்சியாகவும், சில கைதிகளை அலெப்போ நகரில் உள்ள சிறைக்கு மாற்ற அதிகாரிகள் திட்டமிட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும் சிறைச்சாலையில் கைதிகள் கலவரத்தில் ஈடுபட்டபோது இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

துருக்கி எல்லையை ஒட்டிய கோபானி நகருக்குள் சிரிய அரசுப் படைகள் அண்மையில் நுழைந்த போதிலும், இச்சிறைச்சாலை தொடா்ந்து குா்து போராளிகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.