பருத்தித்துறை கொலை – பிரதான சந்தேகநபரும் கைது
;
துன்னாலை பகுதியை சேர்ந்த இரு குழுக்களுக்கு இடையில் நீண்ட காலமாக பகைமை நீடித்து வந்த நிலையில் , மோட்டார் சைக்கிளில் வந்த நால்வர் அடங்கிய குழு ஜெனிதன் மீது சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டனர் . அதில் ஜெனிதன் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் , சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் முல்லைத்தீவில் பதுங்கியிருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் கடந்த 11ஆம் திகதி அங்கு விரைந்த பொலிஸார் மூவரையும் கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்
இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த நிலையில், பிரதான சந்தேகநபர் புதுக்குடியிருப்பில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் , அங்கு விரைந்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்
கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்