;
Athirady Tamil News

யாழ். மாவட்டத்தில் மழையால் 69 குடும்பங்கங்கள் பாதிப்பு!!

0

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த இரண்டு நாளாக மழையுடன் கூடிய காலநிலை காணப்பட்டு வருகின்றது.

இதனால், யாழ். மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, ஊர்காவற்துறை, தெல்லிப்பளை, சங்கானை, சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

பாதிக்கப்பட்டோரின் விவரங்கள் அந்தந்த பிரதேச அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.