;
Athirady Tamil News

கொரோனா அச்சம் காரணமாக வல்வை பட்டத்திருவிழா இடைநிறுத்தம்!!

0

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா கொரோனா இடர் காரணமாக இடைநிறுத்தப்படுவதாக , ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது

வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் வருடாந்திரம் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் பட்டத்திருவிழா இடம்பெறுவது வழமையாகும். அந்த வகையில் இம்முறையில் பட்டத்திருவிழாவை நடாத்த ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்து இருந்தனர்.

அந்நிலையில் , கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்காத நிலையில் , பட்டத்திருவிழாவை நடாத்தும் போது , கொரோனா தொற்று அபாயம் அதிகரிக்கும் என பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்தமையால் , பட்டத்திருவிழாவை இடை நிறுத்துவதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

அதேவேளை இம்முறை பட்டத்திருவிழாவிற்கு , விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சே தனது முழுமையான ஆதரவை தெரிவித்து இருந்தமையும் , அதனால் , பல்வேறு தரப்பினரும் ஏற்பாட்டு குழுவிற்கு தமது கண்டனங்களை தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.