;
Athirady Tamil News

50,000 யூரோவை வைத்திருந்தவர் கைது !!

0

பொரலஸ்கமுவ பெபிலியான பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் 50 ஆயிரம் யூரோ நாணயத்தாள்களை வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் பெறுமதி இலங்கை ரூபாயில் 18 மில்லிய அதிகமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது புஞ்சி பொரளை பிரதேசத்தை சேர்ந்த 53 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கிருலப்பனை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.