;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீர் சுரங்கப்பாதை நிலச்சரிவில் சிக்கிய 10 தொழிலாளர்களும் பலி..!!

0

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ரம்பன் மாவட்டம், கூனி நல்லா பகுதி அருகே சுரங்கப்பாதை தோண்டும் பணி நடைபெற்று வந்தது. கடந்த வியாழக்கிழமை இரவு 10.15 மணியளவில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதனால் பணியில் இருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக்குழுவினர் மீட்பு பணியை தொடங்கினர்.

மீட்பு பணியின்போது முதலில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 6 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால், இறந்தோர் எண்ணிக்கை 9 ஆக இருந்தது.

மேலும் ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தேடப்பட்டு வந்த 10-வது நபரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனால், சுரங்கப்பாதை நிலச்சரிவில் பணியில் ஈடுபட்டிருந்த 10 தொழிலாளர்களும் பலியாகியுள்ளனர்.

நேபாளம், மேற்கு வங்கம், அசாம், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 10 தொழிலாளர்களின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.