;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீரில் கொடூரம் – வீடு புகுந்து டிவி நடிகையை சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகள்..!!

0

ஜம்மு காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தின் ஹிஷோரா பகுதியில் டி.வி. நாடக நடிகை அம்பிரீன் பட் வீடு உள்ளது.

இந்நிலையில், நடிகை அம்பிரீமின் வீட்டிற்குள் நேற்று இரவு பயங்கரவாதிகள் திடீரென நுழைந்தனர். அம்பிரீன் மீதும், அவருடன் இருந்த 10 வயது சிறுமி மீதும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அம்பிரீன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துப்பாக்கி குண்டு காயத்தால் படுகாயமடைந்த 10 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடிவருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.