;
Athirady Tamil News

வழமைக்குத் திரும்ப 14 – 16 நாட்கள் ஆகும்!!

0

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் பழுதடைந்துள்ள முதலாவது மின் பிறப்பாக்கியின் திருத்தப்பணிகள் நிறைவடைவதற்கு சுமார் 14 – 16 நாட்கள் ஆகும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்றைய மின்வெட்டு ஒரு மணித்தியாலம் இருபது நிமிடங்களுக்கு அமுல்படுத்தப்படும் எனவும், நாளை (16) முதல் மின்வெட்டை நீடிக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இன்று (15) காலை ஏற்பட்ட இவ்வனர்த்தத்தால், நுரைச்சோலை அனல்மின் நிலையத்திலிருந்து தேசிய மின்விநியோகத்திற்கு முழுமையான பங்களிப்பு செய்யமுடியாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.