;
Athirady Tamil News

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 11,539 பேருக்கு தொற்று..!!

0

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,539 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. பாதிப்பு நேற்று 13,272 ஆக இருந்த நிலையில் இன்று குறைந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 43 லட்சத்து 39 ஆயிரத்து 429 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த 12,783 பேர் நேற்று குணமாகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 37 லட்சத்து 12 ஆயிரத்து 218 ஆக உயர்ந்தது. தற்போது 99,879 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 1,287 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் மேலும் 43 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிகை 5,27,332 ஆக அதிகரித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.