;
Athirady Tamil News

புதுச்சேரியின் நீர் தேவைக்காக நதிகள் இணைப்பு தேவை- துணைநிலை ஆளுநர் தமிழிசை..!!

0

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் அடுத்த கோவளத்தில் இன்று காலை 10 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மாநில முதல்- மந்திரிகள் பங்கேற்கும் 30-வது தென்மாநில கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. தென்மண்டல கவுன்சிலில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்கள் இடம்பெற்றன. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநில முதல்- மந்திரிகள், தலைமை செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் துணைநிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர், புதுச்சேரியில் விரைவு நீதிமன்றம் அமைத்தல், விமான நிலைய விரிவாக்கம், புதுச்சேரியின் நீர் தேவைக்காக இந்திராவதி- கிருஷ்ணா- பெண்ணை- காவிரி நதிகள் இணைப்பு மற்றும் கோதாவரி- வராகநதி- தென்பெண்ணை நதிகள் இணைப்பு, தமிழ்நாடு வழியாக காரைக்காலில் இருந்து புதுச்சேரிக்கு மணல் கொண்டு வருதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.