;
Athirady Tamil News

இந்தியாவில் கொரோனா ஒருநாள் பாதிப்பு 6,809 ஆக குறைந்தது..!!

0

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,809 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 6,168 ஆக இருந்தது. நேற்று 7,219 ஆக உயர்ந்த நிலையில், இன்றும் பாதிப்பு சற்று குறைந்துள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 53 ஆயிரத்து 957 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 8,414 பேர் நேற்று நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்து 430 ஆக உயர்ந்தது. தற்போது 55,114 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 1,631 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் மேலும் 26 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,27,991 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.