;
Athirady Tamil News

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 4 ஆயிரமாக குறைந்தது..!!

0

இந்தியாவில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,043 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளது. கடந்த 15-ந்தேதி பாதிப்பு 6,422 ஆக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து 5-வது நாளாக இன்றும் பாதிப்பு சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 40 ஆயிரத்து 502 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 4,676 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 67 ஆயிரத்து 340 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 47,379 பேர் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றையை விட 648 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட 6 மரணங்கள் உள்பட மேலும் 15 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,28,370 ஆக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.