;
Athirady Tamil News

பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு செயற்திட்டங்கள் யாழ்.பல்கலை கலைப்பீட மாணவர்களால் ஆரம்பிப்பு! (PHOTOS)

0

பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ரீதியான வழிகாட்டல் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு சார் செயற்றிட்டம் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதிகரித்து வரும் பாடசாலை மாணவர்களின் இடைவிலகலை தவிர்ப்பதற்கும் மாணவர்களிடையே விழிப்புணர்வூட்டுமுகமாக குறித்த செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த செயற்றிட்டமானது வடக்கு , கிழக்கு , மலையகம் தழுவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக கலைப்பீட மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.