;
Athirady Tamil News

பாகூரில் சமத்துவ பொங்கல் !!

0

புதுவை மாநில திமுக சார்பில், சங்கமம் கலைவிழாவோடு சமத்துவ பொங்கல் விழா பாகூர் மூலநாதர் கோவில் அருகில் இன்று கோலாகலமாக நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ.ஏற்பாட்டில் மூலநாதர் கோவில் குருக்கள் பாபு, அருட்தந்தை பெர்க்மென்ஸ்பீட்டர், பள்ளிவாசல் முத்தவல்லி சமியுல்லா முன்னிலையில் 320 பெண்கள் புத்தாடை அணிந்து புதுப்பானையில் புத்தரிசியிட்டு சமத்துவப் பொங்கலிட்டனர். இதனை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மங்கள இசையுடன் தொடங்கிய புதுவை சங்கமம் கலை விழாவில், புதுவை மண்ணின் இயல், இசை, நாடகக் கலைஞர்களை ஒன்றிணைத்து, ஆஞ்சநேயர் சிலம்பம், மல்லர் கம்பம், மரக்கால் ஆட்டம், சூரமங்கலம் கும்மிப்பாட்டு, உடுக்கை பம்பை, கரகாட்டம், பறையாட்டம், தப்பாட்டம், குயிலாட்டம், சிலம்பாட்டம் மற்றும் கண்மணி கிரியேஷன் அமைப்பு சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கிராமிய இசைக்கலைஞர் சினிமா பாடகர்கள் சித்தன் ஜெயமூர்த்தி தலைமை யிலான குழுவினரின் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை புதுவை சங்கமம் குழுவைச் சேர்ந்த நிர்வாகிகள் புதுவை தமிழ்ச்சங்கத் தலைவர் வி. முத்து, பொதுச் செயலாளர் சீனு. மோகன்தாசு, முன்னாள் எம்.எல்.ஏ. பூ. மூர்த்தி, புதுவை கண்மணி கிரியேஷன் அமைப்பின் தலைவரும், தி.மு.க இலக்கிய அணித் தலைவருமான எம். எஸ். ராஜா, தமிழ்ச்சங்கப் பொருளாளர் திருநா வுக்கரசு, துணைத் தலைவர் பாலசுப்ரமணியன், துணை செயலர் அருள்செல்வம், புதுவை மாநில தமிழ்க் கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் ஆறுசெல்வம், தி.மு.க. தொகுதி செயலாளர் பாண்டு அரிகிருஷ்ணன், முன்னாள் துணை சேர்மன் தவமுருகன், விவசாய அணி அமிர்தலிங்கம், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் தமிழரசன், மகளிர் அணி கல்பனா அபிமன்யு, நெசவாளர் அணி சிவா, இளைஞர் அணி ரவீந்தர், மாணவர் அணி கீர்த்தி யாழினி, நிர்வாகிகள் சால்வை மூர்த்தி, குமார், சத்தியமூர்த்தி, குமரன், பாலு, சேகர், சிவா, பார்த்திபன், வினோத், மணிவண்ணன் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.

விழாவில், மாநில அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், தி.மு.க. துணை அமைப்பாளர்கள் சண்.குமரவேல், ஏ.கே. குமார் என்கிற கிருஷ்ணன், குணாதிலீபன், எஸ்.எஸ். செந்தில்குமார், பெல்லாரி கலியபெருமாள், அமுதாகுமார், சுந்தரி அல்லிமுத்து, பொருளாளர் கே.எம்.பி. லோகையன், சிறப்பு அழைப்பாளர்கள் எஸ். கோபால், கார்த்திகேயன், முகிலன், சன். சண்முகம், வடிவேல், கோபாலகிருஷ்ணன், டாக்டர் நித்திஷ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தைரியநாதன், பூ.சு. இளங்கோவன், ஜே.வி.எஸ். ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர்கள் மாறன், வேலவன், சக்திவேல், வேலன், அருட்செல்வி, கோகுல், பழனி, பிரபாகரன், சத்யா ஆறுமுகம், ரவீந்திரன், தொகுதி செயலாளர்கள் ராமசாமி, சக்திவேல், செ.நடராஜன், ராஜா, சிவக்குமார், சவுரிராஜன், சக்திவேல், சீத்தாராமன், செல்வ. பார்த்திபன், தங்கவேலு, ரவிச்சந்திரன், மதிவாணன், கலைவாணன், கலிய கார்த்திகேயன், சாரங்கன், ராஜாராமன், அணிகளின் அமைப்பாளர்கள் மணிமாறன், சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விழாவிற்கு வந்தவர்களை பாகூர் செந்தில்குமார் எம்.எல்.ஏ., அவரது துணைவியார் ஜனனி ஆகியோர் வரவேற்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.