;
Athirady Tamil News

போதை மாத்திரைகளுடன் சிவில் என்ஜினியர் ஒருவர் கைது!!

0

போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சிவில் என்ஜினியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வரெல்ல பிரதேசத்தில் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இந்த போதை மாத்திரையை பயன்படுத்துவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை இலக்கு வைத்து இந்த போதை மாத்திரை ஒன்றை 100 ரூபாவிற்கு விற்பனை செய்வதாகவும் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக சுற்றிவளைப்பை மேற்கொண்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.