;
Athirady Tamil News

பஸ் கட்டணம் இவ்வாறுதான் திருத்தப்படும் !!

0

பஸ் கட்டணங்கள் எதிர்காலத்தில் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விலைச்சூத்திரத்திற்கு அமைவாக பஸ் கட்டணங்கள் திருத்தப்படும் என்றார்.

“போக்குவரத்து கட்டணத்தை குறைக்கலாம், ஏனென்றால் டொலருக்கு செலுத்த வேண்டிய ரூபாய் அளவு குறைக்கப்பட்டால், நமது எரிபொருள் செலவு குறையும். மேலும், உதிரி பாகங்கள் மற்றும் இறக்குமதி பொருட்களின் செலவைக் குறைப்பதன் பலனையும் மக்களுக்கு கொடுக்கலாம்.

விலை சூத்திரத்திற்கு ஏற்ப பஸ் கட்டணம் குறைக்கப்படும். விலை சூத்திரத்துக்கு அமைய, விலை குறையும் போது, ​​வாடிக்கையாளர் குறைவின் பலனைப் பெறுவார்.மேலும், உலக சந்தையில் விலை அதிகரிக்கும் போது, ​​கட்டணம் அதிகரிக்கப்படும்” என்றார்.

இதேவேளை, எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் உற்பத்தியாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் வீதிகளின் ஓரங்களில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.