;
Athirady Tamil News

விமானத்தில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்- பயணி கைது!!

0

துபாயில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் ஜலந்தரை சேர்ந்த ராஜிந்தர் சிங் என்ற பயணி இருந்தார். குடிபோதையில் இருந்த அவர் விமான பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார். கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சில்மிஷம் செய்துள்ளார்.

இதுகுறித்து விமான பணிப்பெண் அவர் மீது புகார் அளித்தார். இதுகுறித்து அமிர்தசரஸ் விமான கட்டுபாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விமானம் அமிர்தசரஸ் வந்து இறங்கியதும் ராஜிந்தர் சிங்கை போலீசார் கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.