;
Athirady Tamil News

இந்தியப் பெருங் கடலில் மூழ்கிய சீனாவின் கப்பல்! !!

0

சீனவின் மீன்பிடிக் கப்பலொன்று இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

விபத்துக்குள்ளான குறித்த கப்பலில் 39 பேர் இருந்ததாக சீனா தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், இலங்கை உட்பட பல நாடுகளில் உள்ள தமது தூதரகங்கள் மூலம் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருவதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.

மத்திய இந்தியப் பெருங்கடலில் Lu Peng Yuan Yu 028 எனும் இந்த சீன மீன்பிடி கப்பல் கவிழ்ந்ததாகவும், அதில் 17 சீனர்கள், 17 இந்தோனேசியர்கள் மற்றும் 5 பிலிப்பைன்ஸ் நாடுகளை சேர்ந்தவர்கள் என மொத்தமாக 39 பேர் இருந்துள்ளனர்.

கடந்த 3 ஆம் திகதி தென் ஆபிரிக்காவின் கேப் டவுனிலிருந்து புறப்பட்ட குறித்த மீன்பிடி கப்பல், மாலைதீவுக்கு தெற்கு திசையில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கப்பல் கண்காணிப்பு இணையத் தளமொன்று தெரிவித்துள்ளது.

இந்த கப்பல் சீன நேரப்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.