ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளராக ஓய்வுபெறும் சரா. புவனேஸ்வரனைக் கௌரவிக்கும் நிகழ்வு!! (PHOTOS)
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளராகவும் சேவையாற்றி அரசபணியில் இருந்து ஓய்வுபெறும் சரா. புவனேஸ்வரனைக் கௌரவிக்கும் நிகழ்வு கலாசாலை அதிபர் ச.லலீசன் தலைமையில் (31.05.2023 புதன்) கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கலாசாலை விரிவுரையாளர் க. அன்பரசி, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் புதிய பொதுச் செயலாளர் சி. கணேசலிங்கம் ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கினர். நிகழ்வில் கலாசாலை சமூகத்தின் சார்பில் மணிவிழா நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது.