;
Athirady Tamil News

“வரிகளை அதிகரிக்க வேண்டும்” !!

0

சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் பாராளுமன்றத்தில் உரையாற்றிக்கொண்டிருக்கும் நிதியமைச்சர் அலி சப்ரி, இலங்கையின் பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு கையிருப்பு 50 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குறைவாக உள்ளது என்றார்.

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண வரிகளை அதிகரித்து சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ள அவர், சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்னதாகவே இலங்கை சென்றிருக்க வேண்டும் என்றார்.

அத்துடன் ரூபாயை முன்னரே மிதக்கச் செய்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்த அவர், இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு வேலைத்திட்டத்தில் ஈடுபடுவதற்கு குறைந்தது 6 மாதங்கள் தேவைப்படும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.