;
Athirady Tamil News

போராடுபவர்களை விரட்டி அடிக்க திட்டம் !!

0

அலரி மாளிகைக்கு முன்பாக அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை தாக்குவதற்கும் அவர்களை அங்கிருந்து விரட்டியடிப்பதற்கும் பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அடக்குமுறை மற்றும் பொலிஸாரின் அதிகாரம் மூலம் மக்களின் இறையாண்மை ஒடுக்கப்படுவதை மக்கள் எதிர்க்க வேண்டும் என தனது பேஸ்புக் பதிவில் இதை அவர் வலியுறுத்தியுள்ளார்.

போராட்டக்காரர்களை ஒன்றிணைந்து போராடுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது அவ்வாறான நடவடிக்கை எடுக்கும் எதிர்பார்ப்பில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.