;
Athirady Tamil News

தகாத உறவால் பெற்ற குழந்தையை தூக்கி வீசிக்கொன்ற இளம்பெண்: டெல்லி அபார்ட்மென்டில் பயங்கரம்!!

0

டெல்லியில் தகாத உறவால் பெற்ற குழந்தையை அபார்ட்மென்டில் இருந்து தூக்கி வீசிக் ெகான்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். டெல்லியின் நியூ அசோக் நகரின் ஜெய் அம்பே அபார்ட்மென்டின் கீழ், இறந்த நிலையில் பிறந்த சில மணி நேரங்களான பச்சிளங் குழந்தையின் சடலம் கிடந்தது. தகவலறிந்த நியூ அசோக் நகர் போலீசார், அந்த குழந்தையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘அபார்ட்மென்டில் வசிக்கும் 20 வயதுடைய பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது.

நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அந்த பெண், தான் பெற்றெடுத்த குழந்தையை மாடியில் இருந்து வீசி கொன்றுள்ளார். அதையடுத்து அந்த பெண்ணின் பிளாட்டை சோதனையிட்டோம். அவரது வீட்டின் குப்பைத் தொட்டியில் ரத்தக் கறைகள் காணப்பட்டன. அவரை காவலில் எடுத்து விசாரித்த போது, தான் குழந்தையை தூக்கி வீசி கொன்றதை ஒப்புக் கொண்டார். அதனால் அவர் மீது கொலை வழக்கு பதிந்து அவரை கைது செய்துள்ளோம். அந்த பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் வேறொருவருடன் ஏற்பட்ட தகாத உறவால் குழந்தையை தனது வீட்டிலேயே பெற்றெடுத்துள்ளார்.

குழந்தை பிரசவமான பிறகு அந்த குழந்தையை என்ன செய்வது என்பது அவருக்கு தெரியவில்லை. அதனால் கழிவறை ஜன்னல் வழியாக பச்சிளங் குழந்தையை தூக்கி வீசிக் கொன்றுள்ளார். தான் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற விசயம் வெளி உலகிற்கு தெரிந்தால் அவமானம் எனக்கூறி தான் பெற்ற குழந்தையை கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த பெண்ணை கர்ப்பமாக்கிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று கூறினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.