கொழும்பு துறைமுக நகரத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி
![](https://www.athirady.com/wp-content/uploads/2023/10/Screenshot-2023-10-19-202305-750x430.jpg)
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் பிரதான தரப்பினர் சீனாவின் பெய்ஜிங்க நகரில் விசேட உடன்படிக்கையை எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது.
அந்த உடன்படிக்கையின்படி ,கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான 1.565 பில்லியன் டொலர் முதலீடு துரிதப்படுத்தப்படவுள்ளது.
அதன் கீழ் மெரினா திட்டம், ஹோட்டல் மற்றும் கொழும்பு சர்வதேச நிதி மைய திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படும் என கொழும்பு துறைமுக நகரம் அறிவித்துள்ளது.