;
Athirady Tamil News

மரக்குற்றிகள் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு

0

லொறியில் இருந்து மரக்குற்றிகள் வீழ்ந்ததில் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் வஸ்கடுவ, கபுஹேன பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார்.

சம்பவத்தன்று, இவர் லொறியிலிருந்து மரக்குற்றிகளை இறக்கிக்கொண்டிருந்த போது லொறியில் இருந்து இரண்டு மரக்குற்றிகள் குறித்த நபரின் மீது வீழ்ந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எகொடஉயன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.