;
Athirady Tamil News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி

0

பின்தங்கிய சமூகங்களில் மனிதாபிமானத்தின் உயிரோட்டத்தையும் ஆன்மீக பண்புகளையும் மீண்டும் கொண்டுவரும் முயற்சியில், கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பங்களிப்பு முன்மாதிரியானது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கருத்துகளை அவர் நேற்று (07) கொழும்பு பேராயர் இல்லத்தில் நடைபெற்ற, கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குருத்துவப் பணிவாழ்வின் 50வது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றிய போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இதன்போது ஜனாதிபதி மேலும் கூறியதாவது,

50வது ஆண்டு நிறைவு விழா
பெரும் சேவையாற்றும் ராஜதந்திரி, வேதவியல் விற்பன்னர், ஆழ்ந்த ஆன்மிக உரைகளை வழங்கும் பேச்சாளர் எனும் எல்லைதாண்டி, அவர் ஒரு உண்மையான மனிதநேயர். சமூகத்தை எழுச்சியூட்டும் ஆளுமை அவரிடம் உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பாதிப்புகளுக்கு நியாயம் நிலைநாட்டும் முயற்சிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.” இது எளிதான பிரச்சினை அல்ல, ஆனால் எவ்வளவு கடினமாயிருந்தாலும் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும், என்றும் அவர் வலியுறுத்தினார்.

விழாவில் பேசிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, தமது 50 வருட அனுபவங்களை பகிர்ந்ததோடு, 75 வருடகால சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தது ஜனாதிபதியால் சாத்தியமான ஒரு வரலாற்றுப் பெரிய மாற்றம் எனவும் கூறினார்.

மேலும், இனக்குழுக்களுக்கிடையேயான வெறுப்பை விதைக்கும் அரசியல் கலாசாரத்தை ஒழிக்க முடிந்ததற்காகவும் நன்றி தெரிவிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.