;
Athirady Tamil News

பாகிஸ்தானில் ஆப்கன் தற்கொலைப் படை சிறுவர்கள் கைது!

0

ஆப்கானிஸ்தான் எல்லையில், தற்கொலைப் படையைச் சேர்ந்த 5 ஆப்கன் சிறுவர்களை, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து எல்லையைக் கடந்து, பாகிஸ்தானுக்குள் ஊடுறுவிய, 5 ஆப்கன் சிறுவர்கள் பெஷிகெல் பகுதியிலுள்ள மசூதியில் நேற்று முன்தினம் (ஜூலை 17) தஞ்சமைந்துள்ளதாக, பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அசிஸ்கெல் மற்றும் மந்திகெல் பகுதிகளுக்குள் ஊடுறுவ முயன்ற, 15 முதல் 18 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்களை பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்ததும், அவர்கள் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அதிகாரிகள் கூறுகையில், கைது செய்யப்பட்ட 5 பேரும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களைத் தற்போது ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ஜூலை மாதம் துவங்கியது முதல் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லை வழியாக ஊடுறுவ முயன்ற 30 பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கடந்த ஏப்ரல் மாதம், ஆப்கானிஸ்தானில் இருந்து வடக்கு வசிரிஸ்தான் மாவட்டம் வழியாக பாகிஸ்தானுக்குள் ஊடுறுவ முயன்ற சுமார் 71 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.