;
Athirady Tamil News

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்

0

மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்ந தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர். தன்மன்பிள்ளை கனகசபை அவர்கள் தனது 86 வது வயதில் வெள்ளிக்கிழமை (19/09/2025) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

1939/03/20 ஆம்திகதி பிறந்த ஓய்வுநிலை அரச உத்தியோகத்தரான இவர் 2004 ம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.