கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளையின் அனுசரணையில் சட்ட மாணவர்களுக்கான நிகழ்வுகள்
கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளையின் அனுசரணையில் சட்ட மாணவர்களுக்கான நிகழ்வுகள்
இலங்கை சட்ட மாணவர் தமிழ் மன்றம் ஏற்பாட்டில் 06.02.2026 அன்று கொழும்பு தமிழ் சங்கத்தின் பிரதான மண்டபத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு (அபார்ட்மெண்ட் ) உரிமைச் சட்டம் & கொண்டோமினியம் மேலாண்மை ஆணையச் சட்டம் ஆகியவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
சட்ட விதிகளை தெளிவாக அணுகக்கூடியதாகவும், தமிழ் பேசும் சமூகங்களை உள்ளடக்கியதாகவும் மாற்றுவதற்கான ஒரு படியாக நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் அன்னலிங்கம் பிரேமசங்கர் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அவர்களும் கௌரவ விருந்தினராக இலங்கை சட்டக் கல்லூரி அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பிரசாந்த லால் டீ அல்விஸ் அவர்களும் கலந்துகொண்டனர்.
அத்துடன் மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் நினைவாக சட்டக் கல்லூரி மாணவர்கள் மற்றும் சட்ட பீட மாணவர்களுக்கிடையிலான விவாத போட்டியும் சிறப்பாக நடைபெற்றது.
கௌரி சங்கரி தவராசா ஞாபகார்த்த அறக்கட்டளையின் அனுசரணையில் இந்நிகழ்வுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
