;
Athirady Tamil News

ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீது தாக்குதல்: பேரழிவு உறுதி – ரஷியா கண்டனம்!

0

ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்தது.

தலைநகர் தெஹ்ரானிலிருந்து தென்கிழக்கே 220 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நடான்ஸ் அணுசக்தி மையம், சனிக்கிழமை(மார்ச் 21) வான் வழி தாக்குதலில் குறிவைக்கப்பட்டதாக ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், இந்தத் தாக்குதலால் கதிவீச்சு அபாயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடான்ஸ் அணுசக்தி மையம் மீதான தாக்குதல்களைச் ‘சர்வதேச சட்ட மீறல்’ என்று குறிப்பிட்டு ரஷிய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் மரியா ஸகாரோவா கண்டனத்தைப் பதிவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக, ரஷிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இத்தகைய பொறுப்பற்ற செயல்கள் மத்திய கிழக்கெங்கிலும் பேரழிவை ஏற்படுத்தும் என்றும் மேலும், அவை இப்பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிட்டது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.