;
Athirady Tamil News

குவைத்தின் வர்த்தகத் துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல்

0

குவைத்தின் பிரதான வர்த்தகத் துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் துறைமுக அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில், சுவைக் துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, இந்தத் தாக்குதலினால் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தில் தற்போது அவசரகால நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.