;
Athirady Tamil News

இரவோடு இரவாக 273 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா: 90% சுட்டு வீழ்த்திய உக்ரைனிய விமானப்படை

0

உக்ரைனிய வான் பரப்பிற்குள் நேற்றிரவு 273 ஆளில்லா வான்வழி ட்ரோன்கள் நுழைந்து தாக்குதல் நடத்த முயற்சித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யா ட்ரோன் தாக்குதல்
உக்ரைனிய விமானப்படை சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், நேற்றிரவு உக்ரைனிய வான் பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து கிட்டத்தட்ட 273 ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ட்ரோன்கள் ரஷ்யாவின் குர்ஸ்க், ஓரல், மில்லெரோவோ மற்றும் ப்ரிமோர்ஸ்கோ-அக்தார்ஸ்க் ஆகிய பகுதிகளில் இருந்து ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பல அடுக்கு வான் பாதுகாப்பு உத்திகளை பயன்படுத்தி ரஷ்யா முன்னெடுத்த ட்ரோன் தாக்குதலை முறியடித்து இருப்பதாக உக்ரைனிய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.

ஏவப்பட்ட 273 ரஷ்ய ட்ரோன்களில் 252 ட்ரோன்களை உக்ரைனிய விமானப்படை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தி இருப்பதாகவும், செயலிழக்க செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் 21 ட்ரோன்கள் பாதுகாப்பு வளையங்களை தாண்டி சென்று 18 இடங்களில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.