;
Athirady Tamil News

பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரால் 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

0

வடமேற்கு பாகிஸ்தானில், பாதுகாப்புப் படையினர் 8 பயங்கரவாதிகளைச் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்தது.

ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில், ஐஎஸ்பிஆரின் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையில் எட்டு தீவிரவாதிகளை பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் கொன்றதாக, அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது.

புதன்கிழமையன்று அப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் பற்றி கிடைத்த தகவல்களையடுத்து, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும், சம்பவ இடத்திலிருந்து ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகள் தீவிரவாதிகளுடன் திறம்பட மோதி, எட்டு பயங்கரவாதிகளைக் கொன்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் இடைக்கால தலிபான் அரசாங்கம் எல்லை நிர்வாகத்தை உறுதி செய்யத் தவறிவிட்டது என்று கூறிய அந்த அறிக்கை, பாகிஸ்தான் தனது வருத்தத்தை மீண்டும் வலியுறுத்தியிருக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.