;
Athirady Tamil News

ஏமாற வேண்டாம்; பொதுமக்களுக்கு அவசர அறிவிப்பு!

0

நாட்டில் பண்டிகைக் காலங்களில் தொலைபேசிகள் ஊடாக முன்னெடுக்கப்படும் சைபர் (Cyber) மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசரப் பதிலளிப்பு நிலையம் (SLCERT) பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த நிலையத்தின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சருக தமுனுபொல தெரிவிக்கையில் ,

பரிசுப் பணம் அல்லது விசேட சலுகை
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு தள்ளுபடிகள் (Discounts), பரிசுப் பணம் அல்லது விசேட சலுகைகளை வழங்குவதாகக் கூறி போலியான விளம்பரங்கள் மற்றும் இணைய இணைப்புகள் (Links) சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையம் ஊடாகப் பரப்பப்படும் அபாயம் காணப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

எனவே, சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை அழுத்துவதையோ அல்லது உங்களது தனிப்பட்ட தகவல்களைப் பரிமாறிக்கொள்வதையோ தவிர்க்குமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.