மே மாத எரிவாயு விநியோகம் ; லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு
நாட்டில் மே மாதத்திலும் எரிவாயு விநியோகம் தொடரும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மட்டுமே நாட்டுக்கு 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு கிடைத்துள்ளதாகவும் மேலும் 17,500 மெட்ரிக் தொன் கையிருப்பு வந்து சேரும் என எதிர்பார்ப்பதாகவும் லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 20,000 மெட்ரிக் டன் எரிவாயு கொண்ட மற்றொரு கப்பல் தென்னாப்பிரிக்கா வழியாக மாலைத்தீவை வந்தடைய உள்ளதால், மே மாதத்திற்கும் போதுமான எரிவாயு கையிருப்பில் இருக்கும் என்றும் லிட்ரோ நிறுவனம் மேலும் கூறியுள்ளது.