யாழ் மறைமாவட்டத்தில் 5 திருத்தொண்டர்கள் புதிய குருக்களாக அருட்பொழிவு
யாழ் மறைமாவட்டத்தில் 5 திருத்தொண்டர்கள் புதிய குருக்களாக யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் யாழ் மரியன்னை பேராலயத்தில் அபிஷேகம் செய்யப்பட்டனர்.
யாழ் மறைமாவட்ட குருவாக பண்டத்தரிப்பு புனித செபமாலை மாதா ஆலயத்தைச் சேர்ந்த அருட்பணி. ஜோன் கில்ரன், பாண்டியந்தாழ்வு புனித அன்னாள் ஆலயத்தைச் சேர்ந்த அருட்பணி. ஜோன் எமில்ரன், வெற்றிலைக்கேணி புனித அந்தோனியார் ஆலயத்தைச் சேர்ந்த அருட்பணி. ஸ்டிபன்ராஜ், கிளறேசியன் சபையின் குருக்களாக நாவாந்துறை புனித பரலோக அன்னை ஆலயத்தைச் சேர்ந்த அருட்பணி. சுகந்தன், பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தைச் சேர்ந்த அருட்பணி. கிருஷாந் ஆகியோர் புதிய குருக்களாக அருட்பொழிவு செய்யப்பட்டுள்ளனர்.
