யோஷித ராஜபக்ஷ பிணையில் செல்ல அனுமதி
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (17) காலை கைதுசெய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யோஷித ராஜபக்ஷ இன்று (17) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வாக்குமூலம் வழங்குவதற்காக சென்றபோதே அவர் கைதுசெய்யப்பட்டார்.
லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, தற்போது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலப்படுத்தப்பட்ட நிலையில் யோஷித ராஜபக்ஷவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.