யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல் தொடர்பில் வடமாகாண ஆளூநர் கலந்துரையாடப்பட்ட நிலை
அத்துடன் சாவகச்சேரி, ஊர்காவற்றுறை உள்ளிட்ட பிராந்திய மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதுடன், அங்கு நிலவும் மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல். அத்துடன், யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனையைச் சூழவுள்ள நகரப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, வீதியோரங்களில் தரித்து நிற்கும் வெளிமாவட்ட அரச மற்றும் தனியார் பேருந்துகளை வீரசிங்க மண்டபத்துக்கு அருகிலுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு மாற்றுவதற்கான உடனடி நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
பலாலி விமான நிலையத்தை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல். கீரிமலை, காங்கேசன்துறை, பலாலி வீதிகளில் (764, 769 வழித்தடங்கள்) முன்னைய பாதைகளிலேயே பேருந்து சேவைகளை அனுமதிக்கக் கோருதல் மற்றும் தம்பாலை – இடைக்காடு – வளலாய் வீதியைப் பலாலி வீதியுடன் இணைப்பதற்கான எஞ்சிய 500 மீற்றர் பகுதியை விரைவாக விடுவித்தல் தொடர்பில் பேசப்பட்டது.
யாழ். நகரம் உட்பட வட மாகாணத்தில் உள்ள சிறிய மற்றும் நடுத்தரக் குளங்களை நன்னீர் தேங்கி நிற்கும் வகையில் புனரமைப்பதுடன், வடிகாலமைப்புகளைச் சீரமைத்தல் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட விடயங்களைக் கேட்டறிந்த ஆளுநர் நா.வேதநாயகன்,