11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரம் ; முன்னாள் கடற்படை தளபதிக்கு அழைப்பானை
கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, கட்டாயமாகக் காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக எதிர்வரும் ஜூன் மாதம் 27ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, 2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் நடந்ததாகக் கூறப்படும் தொடர்ச்சியான கடத்தல் சம்பவங்கள் தொடர்பானது.