கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி!
தமிழக முதலமைச்சர் விஜய், கரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு தகுதி அடிப்படையில் அரசுப்பணி வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வருகிற 10 ஆம் திகதி கரூர் செல்லும் தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் பணி ஆணைகளை வழங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.