;
Athirady Tamil News

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட கைது

0

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவை இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கைதுசெய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்துக்கொண்டு, பிரித்தானிய கடற்படை அகாடமியில் பயிற்சிக்காக அனுப்பியமை தொடர்பில் விளக்கமளிக்குமாறு வசந்த கரன்னாகொட ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்படி, அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியதையடுத்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்போதே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.